×

தா.பழூர், ஜெயங்கொண்டம் பகுதியில் பைக்குகள் நேருக்குநேர் மோதலில் 3 பேர் படுகாயம்

தா.பழூர், டிச. 24: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (45). இவர் தனது சொந்த வேலை காரணமாக உதயநத்தம் சென்று விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வருவதற்காக உதயநத்தம் சோழமாதேவி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த உதயநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த முருகன் (35) என்பவர் ஓட்டி வந்த பைக், ஆனந்தனின் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர். இதுகுறித்து ஆனந்தன் அளித்த புகாரின்பேரில் தாபழூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் (60). இவர் தத்தனூர் கடைவீதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது தத்தனூர் குடிகாடி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சியப்பன் (43) என்பவர் ஓட்டிவந்த பைக் அந்த வழியே வந்த வெங்கடாசலம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வெங்கடாசலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் வெங்கடாசலம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கொளஞ்சியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Jayankondam ,Pallur ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் வீராக்கன்...